News August 14, 2024
சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Similar News
News October 27, 2025
திருச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மணப்பாறை, பொன்.முச்சந்தி அடுத்த மேட்டுக்கடையில் நேற்று இரவு சீத்தப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ணையார்குளத்துப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பால்ராஜ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி, மணப்பாறை GHக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 26, 2025
திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் இன்று ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள், வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாச வேலைகளை தடுக்கும் வகையிலும், போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 26, 2025
திருச்சி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools(EMRS)-யில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


