News August 14, 2024
பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
₹29,000 சம்பளம், 600 பணியிடங்கள்: APPLY NOW!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தில் காலியாகவுள்ள 600 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பொறியியல் டிப்ளமோ. வயது உச்ச வரம்பு: 40. தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹29,735. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. விண்ணப்பிக்க இங்கே <
News October 29, 2025
2026 தேர்தலுக்கு பின் பாஜக காணாமல் போகும்: ரகுபதி

2026 தேர்தலில் DMK தோல்வியடையும் என BJP தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, 2026-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்து பாஜக காணாமல் போகும் என்று தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பான EPS விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தனக்கு உள்ளே இருக்கும் வெறுப்பை தான் EPS வெளிப்படுத்தி வருகிறாரே தவிர, மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.
News October 29, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

2025 – 26ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் +1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. சைக்கிளுக்கான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகளுக்கு தலா ₹4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு தலா ₹4,375 மதிப்பிலும் சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் உத்தரவாத அட்டை வழங்குவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


