News August 14, 2024

பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

தேனி மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

image

தேனி மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<> இங்கே க்ளிக் செய்து <<>>இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்து மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News August 22, 2025

BREAKING: பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

image

தென் அமெரிக்கா – அண்டார்டிகா கண்டங்களுக்கு இடையே உள்ள டிரேக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதால், ராட்சத கடல் அலைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளுக்கு தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்யா, ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2025

நடிகர்கள் கலைக்கான கருவி மட்டுமே: ஷ்ருதிஹாசன்

image

ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் தென்னிந்திய சினிமாவில் உண்டு என ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டை ஒப்பிடுகையில் தென்னிந்திய சினிமாவில் நிறைய பணம் இருந்தாலும் ஆடம்பர ஆடை அணிய மாட்டார்கள், பலர் இன்றும் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும், நடிகர்களாகிய நாம் கலைக்கான ஒரு கருவி மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

error: Content is protected !!