News August 14, 2024

மாமனாருக்கு அரிவாள் வெட்டு

image

ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை 2002ல் திருமணம் செய்துகொண்டார். சுரேஷூக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால், மன வேதனையடைந்த லதா கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், லதாவை சமாதானப்படுத்த வந்த சுரேஷ் நேற்று மாமனார் ஆரோக்கியத்தை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.

Similar News

News November 7, 2025

அரியலூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

அரியலூர் மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

அரியலூர்: புதிய நூலக கட்டிடம் திறப்பு

image

ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தினை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்கள் நூலகத்தை பார்வையிட்டு, தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க கோரி அரசு அலுவலர்களிடம் கூறினார்.

News November 7, 2025

அரியலூர்: 12th போதும்! அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!