News August 14, 2024

விமான டிக்கெட் கட்டணங்கள் 2 மடங்கு உயர்வு

image

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை செல்லும் விமான டிக்கெட் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திர தினம், வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த கட்டணம் ரூ.10,796 ஆகவும், மதுரைக்கு ரூ.4,063 ஆக இருந்த கட்டணம் ரூ.11,716 ஆகவும், திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், கோவை ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.

Similar News

News October 21, 2025

சென்னையில் இன்று மூடல்

image

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 4 இறைச்சி கூடங்களும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று (செப்-21) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல ஜெயின் கோவில்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைட்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News October 20, 2025

சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று (20.10.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News October 20, 2025

பட்டாசு கழிவை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது: மாநகராட்சி

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேர கட்டுப்பாடு உள்ளது. பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!