News August 14, 2024
நல்லாசிரியர் விருது: 24 பேரிடம் நேர்காணல்

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 ஆசிரியர்களிடம் நேற்று நாமக்கல்லில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, உயர்நிலை, தனியார் பள்ளிகள்), தலைமை ஆசிரியர்கள் இருவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் அடங்கிய குழு, முதன்மை கல்வி அலுவலர் அறையில் தனித்தனியாக ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
Similar News
News November 15, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் – (மாதேஸ்வரன்- 9498168949) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
நாமக்கால ஆயுதப்படையில் வாராந்திர கவாத்து பயிற்சி!

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.


