News August 14, 2024
ஈரோட்டில் சோதனைக்கு பின் அனுமதி

ஈரோடு ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வந்த ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடைமைகளை
சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News August 5, 2025
காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன் கருதி இன்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
News August 5, 2025
ஈரோடு: வட மாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஒடிசா மாநிலம், பர்கோச்சா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜக்தலா, 48. இவர் கடந்த 4 மாதங்களாக சிப்காட் பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வேலைக்கு சென்றவர் அங்கு மேற்பார்வையாளர் இடத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 5, 2025
ஈரோடு: மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 5402 ஹைபிரிட் மக்காச்சோள விதை மானிய விலையில் வேளாண்மை துறை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தாளவாடி மற்றும் துணை வேளாண்மை மையம் அறை பாளையம் ஆகிய கிடங்குகளில் இருப்பு உள்ளது, தேவைப்படும் விவசாயிகள் தாளவாடி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண் 9688491749.