News August 14, 2024

தருமபுரியில் சுதந்திர விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

image

தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 27, 2025

தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 27, 2025

தருமபுரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News December 27, 2025

தருமபுரி: கார் மோதி விவசாயி பலி!

image

சோமன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). விவசாயி. இவர் பிக்கம்பட்டி அருகே மோட்டார் சைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!