News August 13, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது குறித்து விசாரணை மேற்கொள்ள 7 நாட்கள் அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் 4 நாட்களுக்கு அனுமதியளித்துள்ளது.
Similar News
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 21ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் நாளை செ.20, 21ம் தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு, மீண்டும் சென்னை திரும்பும் பயணத்துக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 18, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.