News August 13, 2024
நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News March 6, 2026
நாங்குநேரி: கொலையானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி கொலை செய்தது. இதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதேபோல் வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டாவின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கினார்.
News March 6, 2026
நெல்லை: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.
News March 6, 2026
நாங்குநேரி சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா? – திருமா

நெல்லை வருகை தந்த திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்:- நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என கண்டறிய வேண்டும். போதை பழக்கம் மட்டும்தான் காரணம் என்றாலும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் பேட்டி அளித்தார்.


