News August 13, 2024

அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்ற மேயர்

image

சென்னையில் தமிழக முதலமைச்சர் புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான ஆணையை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் இடம் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாநகரச் செயலாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News August 21, 2025

புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

image

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

புதுக்கோட்டை: குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், <>-1<<>> என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!