News August 13, 2024
மன்னார்குடி அருகே அமைச்சர் ஆய்வு

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் அசேஷம் ஊராட்சி சிங்கங்குளம் மற்றும் சேரன்குளம் இடையே பாமணி ஆற்றின் குறுக்கே ரூ 6.06 கோடி மதிப்பீட்டில் PMGSY திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை மூலம் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியினை இன்று தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 12, 2025
திருவாரூர்: பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
வலங்கைமான் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் மேலவிடயல் ஊராட்சி கும்ப சமுத்திரம் கலைஞர் நகரில் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வ.மோகனசந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர் உடனிருந்தனர்.
News September 12, 2025
திருவாரூர் இளைஞர்களே RBI வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!