News August 12, 2024

தொழில் முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் திருச்சி கிளை அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 19ஆம் முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். மேலும் தகவலுக்கு 0431-2460498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

திருச்சி: தேவாலயங்களை புனரமைக்க மானியம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீர், கழிவறை வசதிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு மானியம் வழங்க உள்ளது. இதற்கு தகுதியான தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

சென்னை – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

image

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளிக்கு இன்று (ஆக.14) இரவு இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 11:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை (ஆக.15) காலை 7:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

image

திருச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW

error: Content is protected !!