News August 12, 2024
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டமானது ஆறாம் கட்டமாக வருகிற 21-ம் தேதி நிலக்கோட்டை வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இம்முகாம் நடைபெறும் நாளில் பொதுமக்கள் மனு அளித்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெற,மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்
Similar News
News August 6, 2025
பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பாக வாலிபர் கைது

பழனி பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக நிர்மல்குமார், விவசாயி காளீஸ்வரன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கிடுகு கூரை மீது தீ வைத்தது தொடர்பாக மாவட்ட S.P.உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News August 6, 2025
வத்தலகுண்டு: 11 வயது சிறுமி பரிதாப பலி

திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 6, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! APPLY NOW

தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு வருகிற ஆக்.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க நாளையே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<