News August 12, 2024

காஞ்சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு நிதி உதவி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News August 27, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

காஞ்சிபுரம்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் (அ) நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

காஞ்சிபுரம்: அரசு துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்ங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!