News August 12, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் பெறப்பட்ட 20 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா உடன் இருந்தார்.
Similar News
News March 5, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.4) இரவு 10 மணி முதல் (மார்ச்.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
திருவாரூர்: தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

திருவாரூர் மாவட்டம் தேசியத் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகின்ற மார்ச்.9 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் பயிற்சியாளர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News March 4, 2026
திருவாரூர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். ஷேர் பண்ணுங்க.


