News August 12, 2024
பழனி மலையடிவாரத்தில் 350 கடைகளுக்கு நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் 350க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டியதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்குள் கட்டடதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 6, 2025
வத்தலகுண்டு: 11 வயது சிறுமி பரிதாப பலி

திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 6, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! APPLY NOW

தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு வருகிற ஆக்.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க நாளையே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News August 6, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்கம் – திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஆக.6) காலை திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனையில், பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.