News August 12, 2024
திருச்சியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.13) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக் கொல்லைத்தெரு, சீராத்தோப்பு, சத்திரம் பேருந்து நிலையம், EB. ரோடு ஏகிரிமங்கலம், காவேரிநகர், முத்தரசநல்லூர், ஜீயபுரம், தேவானுர், அரசங்குடி உள்ளிட்ட பிற பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஓலையூர் பகுதியை சேர்ந்த பெண் தனது 3 வயது பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குசென்றபோது, ஆரோக்கிய சவரிராஜ்(39) என்பவர் பெண்குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கிய சவரிராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றதில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
துவாக்குடியில் 216 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

துவாக்குடி பூசாரி தெரு மளிகை கடையில் போலீசார் நடத்திய சோதனையில் கடை உரிமையாளர் ஜெகதீஸ்வரனிடம் இருந்து 7.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையெடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வயலூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த ஜமால் முகமது என்பவரின் வீட்டில், நடத்திய சோதனையில் 208.5 கிலோ குட்காபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 4, 2026
இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகை அகற்றம்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை ரயில்வே நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் திமுக, அதிமுக, நாம் தமிழர் என பல்வேறு அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்பினர். அதனைத் தொட்டர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் சார்பில் பெயர் பலகையை அகற்றினர்.


