News August 12, 2024
ஃபோனை ஹேக் செய்துள்ளனர்: சுப்ரியா சுலே

தனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக என்சிபி எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த சம்பவம் தொடர்பாக புனே போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Similar News
News August 20, 2025
சவுதியின் நவீன வான்வெளி மைதானம்!

2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News August 20, 2025
ஒழுக்கம் பற்றி எனக்கு சொல்கிறீர்களா? அமித்ஷா

2010-ல் அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார், அப்போது அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா என லோக்சபாவில் காங்., MP வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, உடனே ராஜினாமா செய்துவிட்டு, போலி வழக்கில் விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை, எனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் எனக் காட்டாமாக தெரிவித்தார்.
News August 20, 2025
கடத்தல் தங்கம்: மத்திய அரசு வெளியிட்ட ஷாக் கணக்கு

2023-24-ல் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லிமென்ட்டில் கூறியுள்ளார். இது, 2022 – 23-ல் 4,343 கிலோ, 2021 – 2022 நிதியாண்டில் 2,172 கிலோவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்தத் தகவல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டவிரோதமான கடத்தல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதனை தடுக்க என்ன வழி?