News August 12, 2024
முல்லைப் பெரியாறு குறித்து வதந்தி: ஆர்.பி.உதயகுமார்

முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளா வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற வதந்திகளை அம்மாநில அரசியல் கட்சிகள் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை தண்ணீர் வெடிகுண்டு என கேரள காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.
Similar News
News March 10, 2026
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் காலமானார்

நாட்டின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களின் ஒருவரான KN பணிக்கர்(89) இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த அவர், நவீன இந்தியா, இந்தியாவின் மார்க்சிய வரலாறு தொடர்பாக எண்ணிலடங்கா நூல்களை எழுதியுள்ளார். அவரது 90-வது பிறந்தநாளை அடுத்த மாதம் சிறப்பாக கொண்டாட கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்திருந்த நிலையில், மறைந்தது பெரும் சோகம். பணிக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News March 10, 2026
இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.
News March 10, 2026
விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.


