News August 11, 2024
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஜூன் 29ஆம் தேதி முதல் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரான பின்பு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 13, 2026
மார்ச் 13: வரலாற்றில் இன்று

*1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. *2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சுக்கு 1,000-ஐ தாண்டியது. *1980 – இந்திய அரசியல்வாதி வருண் காந்தி பிறந்த தினம். *1982 – இசையமைப்பாளர் தர்புகா சிவா பிறந்த தினம். *1994 – இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பிறந்த தினம் *2015 – தமிழ் எழுத்தாளர் தி.சு.கிள்ளிவளவன் நினைவு தினம்.
News March 13, 2026
ரஜினி மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை: நற்பணி மன்ற மா.செ.

ரஜினியின் அரசியல் குறித்து <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சோளிங்கர் மா.செ., N.ரவி பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா தொற்று உயிர் இழப்புகளை தவிர்க்கவே அந்நேரத்தில் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்கள் மிரட்டலுக்கு அஞ்சுபவர் இல்லை எனவும், தனது பலத்தை நிரூபிக்க உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை: ஃபரூக்

தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மயிரிழையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் அமித் ஷா போனில் தன்னை தொடர்புகொண்டு விசாரித்ததாக கூறினார். தற்போது நாட்டில் நிலவும் வெறுப்பு பிரசாரத்தால் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


