News August 11, 2024
ஓடும் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்

உத்தர பிரதேசத்தில், ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்பூர் அருகே சென்ற ஹவுரா-அமிர்தசரஸ் மெயிலின் ஜெனரல் கோச்சில் பயணித்த சிலர், தீத்தடுப்பு கருவியை உபயோகித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட புகைமூட்டத்தை, ரயிலில் தீப்பற்றியதாக நினைத்த சிலர் திடீரென குதித்துள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2026
கோவை: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

கோவை மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 16, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


