News August 11, 2024

நாமக்கல் நகராட்சி நாளை முதல் மாநகராட்சி

image

நாமக்கல் மாவட்டம் 1.1.1997 ஆம் ஆண்டு முதல் சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1988 முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்த நாமக்கல், கடந்த மாதத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். எனவே நாளை முதல் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக இயங்க உள்ளது. இந்த மாநகராட்சியில் கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Similar News

News November 15, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் – (மாதேஸ்வரன்- 9498168949) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News November 15, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

நாமக்கால ஆயுதப்படையில் வாராந்திர கவாத்து பயிற்சி!

image

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.

error: Content is protected !!