News August 11, 2024
திருச்சியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

திருவானைக்காவலில் 20வது தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பாரம்பரியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் வரவேற்று பேசினார். மேலும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை குத்து விளக்கேற்றி பரிசுகளை வழங்கினார்.
Similar News
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


