News August 11, 2024
வேலைவாய்ப்புடன்கூடிய பட்டப் படிப்பு

ஆதிதிராவிடா் வீட்டு வசதி,மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022 -2023, 2023 -2024 இல் +2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம். இதில் ரூ. 17,000 முதல் ரூ. 22,000 வரையிலும், பின்னா் ரூ.70,000 மாத ஊதியமாகப் பெறலாம். விவரங்களுக்கு 04328 – 276317 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
பெரம்பலூர்: 356 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று (நவ.10) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 356 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
பெரம்பலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


