News August 11, 2024
ஆவடியில் விஷ வாயு தாக்கி தொழிலாளர் உயிரிழப்பு

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் இதேபோல் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 19, 2025
ALERT: சென்னையில் இன்று மழை வெளுக்கும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க.
News September 19, 2025
சென்னை மக்களே குடிநீர் வரவில்லையா?

சென்னை மக்களே உங்கள் தெருக்களில் குடிநீர் வரவில்லை அல்லது கழிவுநீர் தேங்கி உள்ளதா? இனி கவலை வேண்டாம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பகிர 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை chennai metro water அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அல்லது toll-free 1916 எண் மூலம் உடனே தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.