News August 11, 2024
திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
திருச்சி: நாய்க்குட்டிகளை கொன்ற பெண் கைது

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்ற பெண், தெரு நாய் குட்டிகளை சுவரில் வீசி எறிந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பீப்பிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பின் சார்பில், அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 7, 2026
திருச்சி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தம்பதியினர் முரளி(32), சினேகா(26). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், சினேகா செல்போனில் அதிகம் பயன்படுத்துவதாக கூறி, முரளி கண்டுத்துள்ளா. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முரளி அரிவாளால் சினேகாவை வெட்டியுள்ளாட். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.


