News August 11, 2024
அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்களுடன் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் பியூஷ்ஆனந்த் மீட்பு படை வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் பிரதமர் மோடியிடம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
Similar News
News August 20, 2025
FLASH: ராணிப்பேட்டையில் இபிஎஸ் சொன்ன குட் நியூஸ்!

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை இன்று (ஆக.20) EPS மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன் பெற்றனர் எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
News August 20, 2025
ராணிப்பேட்டையில் ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
ராணிப்பேட்டையில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி <