News August 11, 2024

ஒடுகத்தூரில் பெய்த மழையால் சேதமான நெற்கதிர்கள்

image

வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகின. மேலும், ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் ,மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாகவும் அப்பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சளி சம்பார். ஐ.ஆர்59 போன்ற நெல் ரகங்கள் நீரில் மூழ்கியது.

Similar News

News August 10, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

News August 10, 2025

வேலூர் மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

image

வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்றை போலவே இன்றும் (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.

News August 10, 2025

முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வு

image

வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில், முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது. இதில் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!