News August 11, 2024
நெல்லை-செங்கல்பட்டு சிறப்பு ரயில்

சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறையால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நெல்லையிலிருந்து செங்கல்பட்டிற்கு ஆக. 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து ஆக.14,19 ஆகிய தேதிகளில் மாலை 05.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக.,11) காலை 8 மணிக்கு தொடங்கியது.
Similar News
News January 18, 2026
நெல்லை: பொங்கல் விழாவில் இரு தரப்பினர் மோதல்!

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெற்கு தெரு அருகே பொங்கல் விழா போட்டி நடத்தி பரிசு வழங்குவதில் இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மந்திரமூர்த்தி(37) மற்றும் அருள்ராஜ்(46) ஆகிய இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 7 நபர்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 18, 2026
நெல்லை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News January 18, 2026
நெல்லை: சுற்றுலாவிற்கு நாளை முதல் தடை!

களக்காடு புலிகள் காப்பக வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், சுற்றுலாவிற்கும் நாளை (ஜன 19) முதல் 6 நாட்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தலைமையில், மாநில வன துறைகளின் ஒத்துழைப்புடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.


