News August 11, 2024

திண்டுக்கல்லை சேர்ந்த குடும்பம் தற்கொலை: என்ன காரணம்?

image

திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து, உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரித்தனர். நகை உருக்கும் தொழில் செய்துவந்த சந்திரசேகர், திருட்டு நகைகள் வாங்கிய புகாரில் சிக்கியதால் போலீசார் விசாரணை நடத்தியதாகவும்,அதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Similar News

News August 7, 2025

பட்டய பயிற்சி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

image

திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025- 2026ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்திற்கான காலம் 22.08.2025 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயிற்சியில் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் 25.08.2005 ஆகும். மேலும் விபரங்களுக்கு 0451-4056597 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

News August 6, 2025

திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி வேலை.. ரூ.96,395 சம்பளம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 6, 2025

பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பாக வாலிபர் கைது

image

பழனி பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக நிர்மல்குமார், விவசாயி காளீஸ்வரன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கிடுகு கூரை மீது தீ வைத்தது தொடர்பாக மாவட்ட S.P.உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!