News August 11, 2024

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.

Similar News

News May 8, 2025

டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து இன்று முதல் ( மே.08) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News May 8, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

image

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.

News May 8, 2025

கள்ளக்குறிச்சி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தார்.

error: Content is protected !!