News August 10, 2024
திருப்பத்தூர் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்கப்படுகிறது. இதனை தங்கள் வீடுகளின் அருகே உள்ள அலுவலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திருப்பத்தூர்: மாணவன் பைக் மோதி படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் தேசிய நெடுஞ்சாலை இன்று ஆகஸ்ட் 20 மாலை வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சாலையைக் கடக்கும் போது பைக் மோதி சோலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரஜினி மகன் ராகேஷ் வயது (14) 9 வகுப்பு பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகிறது.
News August 20, 2025
திருப்பத்தூர்: வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.08.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
News August 20, 2025
திருப்பத்தூரில் கூட்டுறவு வளர்ச்சிக் குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 6 மணியளவில் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மலர்விழி துணைப்பதிவாளர் மீனாட்சி உதவி பொது மேலாளர் நபார்டு ஸ்ரீபதிராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.