News August 10, 2024

திண்டுக்கல் தலைப்பு செய்திகள்

image

➤திண்டுக்கல் வட்ட ஆட்சியர் அலுவலங்களில் இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
➤ திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
➤ கொடைக்கானல் விடுதியில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
➤ தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளி தேர் இழுக்க முன்பதிவு அவசியம்

Similar News

News December 5, 2025

பழனி அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

image

பழனி அருகே சின்ன கலயமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது தரணீஸ்வரன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுகிறார். ஆனால் நோய் குணமடையாததால் மன அழுத்தம் அதிகரித்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். நெய்காரப்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்தில் சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

image

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 5, 2025

திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்த பயங்கர சம்பவம்!

image

திண்டுக்கல் இந்திரா நகர் மாரிமுத்து (50) நேற்று முன்தினம் வெளியில் சென்றபோது, மர்மநபர் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடினார். அதேநாள் சொப்பணதேவி வீட்டில் ரூ.1 லட்சமும் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி மூலம் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் சதீஷ்குமார் (24) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட நகை, பணமும் மீட்கப்பட்டன.

error: Content is protected !!