News August 10, 2024

செயற்கை காலை அகற்ற கூறிய எஸ்.எஸ்.ஐ பணியிட மாற்றம்

image

தர்மபுரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி என்ற பெண் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது செயற்கை காலை அகற்ற சொல்லி போலீசார் கட்டாயப்படுத்தியதாகவும்,சக்கர நாற்காலியில் செல்ல ரூ.500 கேட்டதாகவும் கூறி அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் எஸ்.எஸ். ஐ சந்தானபாண்டியன் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News July 6, 2025

மமக மாநாடு – போக்குவரத்து மாற்றம்

image

பாண்டி கோவிலில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக மதுரை காவல்துறை போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சாலை, கோரிப்பாளையம், தத்தனேரி, காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு, சர்வேயர் காலனி, பொன்னகரம், எஸ்.எஸ். காலனி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும். இது பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்யும். இன்று மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 6, 2025

மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மதுரை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News July 6, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!