News August 10, 2024
வேலூரில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல் தேர்வு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்காணல் இன்று ( ஆகஸ்ட் 10 ) நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
Similar News
News December 17, 2025
வேலூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பாபு ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். அவரை மத்திய மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூரில் இருந்து பாபு ரவிச்சந்திரன் விடுவிக்கப்பட்டார். அவர் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
News December 17, 2025
வேலூர்: இளைஞர் மர்ம சாவு!

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி, எம்.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் பாபு(33). இவர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் நண்பரின் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு உறங்கிய அவர், நேற்று(டிச.16) காலை எழும்பவில்லை. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News December 17, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


