News August 10, 2024

நாகையில் சாகச நிகழ்ச்சி

image

நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐடிஐ வளாகத்தில் நடைபெற உள்ள மூன்றாவது புத்தகக் கண்காட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல் துறையினரின் பயிற்சி பெற்ற நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகள் ஆக.17 நடத்தப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த செல்ல பிராணிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்.

Similar News

News August 20, 2025

என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

நாகை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

image

நாகை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.(<<17465707>>பாகம் 2<<>>)

News August 20, 2025

நாகை: ரூ.1 லட்சம் மதிப்பில் மதுபாட்டில் பறிமுதல்

image

நாகை மாவட்டம் நாகூர்-திருமருகல் சாலையில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே காரைக்கால் திருபட்டினத்தை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் காரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!