News August 10, 2024

நாகையில் தடுப்பூசி முகாம்

image

நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஆக.17 அன்று செல்ல பிராணிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படாத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லப்பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 27, 2025

நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 27, 2025

நாகை: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள் ,மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

நாகை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய நாகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!