News August 10, 2024
சென்னை பல்கலையில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமன தேர்வுக்குழு அமைப்பதை காரணம் காட்டி, கடந்த 2023 ஏப்ரலில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கவில்லை. சான்றிதழ் பெறாத காரணத்தால் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News October 21, 2025
BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வந்ததால், முதல்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டள்ளது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 அடிஉயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.20 அடிக்கு நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 21, 2025
BREAKING: செம்பரபாக்கம் ஏரி இன்றே திறப்பு?

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரபாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1110 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் முழுகொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு 100 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 21, 2025
BREAKING: சென்னைக்கு 3 நாட்களுக்கு ORANGE ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.