News August 10, 2024

தி.மலை பள்ளி மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மீட்பு

image

திருவண்ணாமலையைச் சார்ந்த மூன்று மாணவர்கள் பள்ளியில் நடந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் மாணவர்களை கண்டித்துள்ளனர். இதனால், பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட மூன்று பேரும் அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளனர். அவ்வாறு வந்த மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் பகுதியில் சுற்றித் திரிந்த போது கூடுவாஞ்சேரி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 14, 2025

செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

செங்கல்பட்டு: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பிரவின்குமார் என்பவரின் 2,400 சதுர அடி நிலத்தை பத்திர பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (நவ.13) கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலையில், உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை குடியிருப்பு வாசிகள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சர்புதீன் என்ற அந்த நபர் இதே போல் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது

error: Content is protected !!