News August 9, 2024

சாமியை சிறை வைப்பதா?: நீதிபதி

image

கோயிலைப்பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மதுரை உத்தபுரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களை திறப்பது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த அவர், சிறையிலுள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதாகவும், இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்டவை கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Similar News

News November 6, 2025

ஓட்டுப் போட மிகவும் ஆர்வம் காட்டும் பிஹார் மக்கள்

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிஹார் தேர்தலில், மதியம் ஒரு மணி வரை, 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கத்தை விட இம்முறை பிஹார் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை வாக்குப்பதிவு சதவீதம் தெளிவாக காட்டுகிறது. அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 46.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. பிஹாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

News November 6, 2025

RAIN ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது!

image

பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், தி.மலையில் இடியுடன் மழையும், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News November 6, 2025

பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

image

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். பல பெண்களுக்கு பயனுள்ள இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!