News August 9, 2024
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர். ஒரு வாரம் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அம்மன் வீதி உலா ஆக.16 நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (66). பட்டாசு தொழிலாளியான இவர் செவல்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்கின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News November 7, 2025
BREAKING விருதுநகருக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.
News November 7, 2025
EXCLUSIVE விருதுநகரில் 16,421 பேரை கடித்த நாய்கள்

விருதுநகர் மாவட்டத்தில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 16,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் – 3134, அருப்புக்கோட்டை – 891, ராஜபாளையம் – 1311, திருச்சுழி – 1048, வத்திராயிருப்பு – 1674, சாத்தூர் – 2259 , காரியாபட்டி – 3145, சிவகாசி – 2959 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.


