News August 9, 2024

திருவாரூரில் கடன் மேளா – ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் ஆட்சியர் இன்று (ஆக.09) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்க கடன்மேளா வரும் 14ஆம் தேதி குடவாசல்,21ஆம் தேதி வலங்கைமான்,28ஆம் தேதி நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது.கடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

திருவாரூர்: வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 30% மானியம் வழங்கப்படும் என்றும், மாவட்டத்திற்கு மொத்தம் 23 மையங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த தகவலுக்கு வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

திருவாரூர்: ரூ.5 லட்சம் பரிசு வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில், மாநில அளவிலான விளைச்சல் போட்டியில், விவசாயிகள் கலந்து கொண்டு மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருது வழங்கப்படும். சிறப்புப் பரிசாக ரூ.5 லட்சம் பரிசு மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 9, 2025

திருவாரூர்: ரோந்து பணி அதிகாரிகள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.8) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!