News August 9, 2024

மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

image

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.

Similar News

News August 13, 2025

17 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

image

கோவை: காரமடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு அவரது உறவினரான 17 வயது மாணவனும் படித்து வருகிறார். இந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 13, 2025

கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

image

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 13, 2025

கோவை: மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.21,700 முதல் 69,100 சம்பளம் வழங்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு கோவையில் நடைபெறும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு பணி கிடைக்க சூப்பர் சான்ஸ் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!