News August 9, 2024
விருதுநகரில் நாளை விடுமுறை அறிவிப்பு

2024 – 2025 ஆம் கல்வியாண்டு நாள்காட்டியில் ஆகஸ்ட் மாதத்தின் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை பள்ளி வேளை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 பள்ளி வேளை நாட்களையும் பள்ளி கல்வித்துறை ரத்து செய்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
பயிர்காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 – ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
விருதுநகரில் ஊராட்சி துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் நவ.9 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News October 22, 2025
விருதுநகர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.