News August 9, 2024

அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

image

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 26, 2025

தவெக கூட்டணி.. விஜய்யின் மாஸ்டர் பிளான் வெளியானது

image

1967, 1977-ம் ஆண்டு போல் TN தேர்தல் வரலாறு மாறும் என விஜய் பேசி வருவதற்கு பின்னால், மாபெரும் மாஸ்டர் பிளான் இருப்பது தெரியவந்துள்ளது. DMK, ADMK கூட்டணி ஆட்சிக்கு பிடி கொடுக்காமல் உள்ளன. இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியில் பங்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வரும் காங்கிரஸ், PMK, DMDK உள்ளிட்ட கட்சிகளை TVK ஒருங்கிணைக்க முயல்கிறதாம்.

News August 26, 2025

டிரம்ப்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த மோடி

image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 50% வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்ட PM மோடி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும், சிறு தொழில்முனைவோர்கள், விவசாயிகளுக்கு தீங்கு ஏற்பட விடமாட்டோம் என மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர் உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 26, 2025

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் CM

image

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் இன்று CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்கிறார். இந்த திட்டத்தால் ஏற்கெனவே 18.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால் மேலும் 3.06 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!