News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 16, 2026
இபிஎஸ் வீட்டில் நயினார்.. இறுதியாகும் தொகுதி பங்கீடு

நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில், NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என நினைக்கிறீர்கள்?
News February 16, 2026
நாளை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளைமுதல் தொடங்குகிறது. இந்தாண்டு தேர்வுகள் சில புதிய மாற்றங்களுடன் தொடங்க உள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு முதல் 2 முறை பொதுத்தேர்வு எழுதலாம். 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் கணினி திரை வழியே (On-Screen Marking) திருத்தப்பட உள்ளன. இது மதிப்பெண் கூட்டலில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கவும், முடிவுகளை விரைவாக வெளியிடவும் உதவும்.
News February 16, 2026
இளையராஜாவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

Saregama நிறுவனம் வசமுள்ள 134 பட பாடல்களை இளையராஜா பயன்படுத்த டெல்லி HC இடைக்கால தடை விதித்துள்ளது. 1976-2001 காலக்கட்டத்தில் இளையராஜா இசையமைத்த அப்பாடல்களின் நிரந்தர காப்புரிமையை படத்தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுவிட்டதாக Saregama வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில், அப்பாடல்கள் தனக்கே சொந்தம் என டிஜிட்டல் தளங்களில் இளையராஜா பதிவேற்றியது சட்டவிரோதம் என்ற Saregama-வின் வாத்தையும் கோர்ட் ஏற்றது.


