News August 9, 2024
நெல்லைக்கு புதிய துணை காவல் ஆணையர்

நெல்லை மாவட்ட புதிய துணை காவல் ஆணையராக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுரை ஊழல் தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண், தற்போது மணிமுத்தாறு 12வது சிறப்பு காவல் படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 3, 2025
நெல்லையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு; சிறுமி உயிரிழப்பு

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவம்பர் 3) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இவ்வாறு இந்த நிமோனியா காய்ச்சலால் மூன்று வயது சிறுமியின் உயிரிழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
News November 3, 2025
தொந்தரவு செய்தால் நடவடிக்கை – கலெக்டர் அட்வைஸ்

ஆட்சியர் சுகுமார் இன்று அளித்த பேட்டியில், வாக்கு சாவடி அதிகாரிகள் சிறப்பு திருத்தபட்டியல் சரிபார்ப்பு பணியின் போது அரசியல் கட்சி முகவர்கள் உடன் செல்ல அனுமதி உள்ளது. அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை கலைய முகவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
News November 3, 2025
நெல்லை: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..


