News August 9, 2024

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 19 பவானிசாகர் அணை 70வது ஆண்டு நிறைவுசெய்கிறது.

Similar News

News August 21, 2025

ஈரோடு அருகே ஆடு திருடிய இரண்டு பேர் கைது

image

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் தொடர்ந்து திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையம் டேங்க் மேட்டை சார்ந்த சத்தியமூர்த்தி, ரமேஷ் குமார் ஆகிய 2 பேரை இன்று கைது செய்து
அவர்கள் வசம் இருந்து 27 ஆடுகள் கைப்பற்றப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News August 21, 2025

ஈரோடு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

ஈரோட்டில் இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆவணங்களுடன் இ-சேவை மையத்தை அணுகலாம். கூடுதல் தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!