News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 6, 2025
புதுவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1.புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552
2.காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450
3.மருத்துவ அலுவலர் 04368-222593
4.பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917
அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். இதனை SHARE பண்ணுங்க…
News December 6, 2025
புதுவை: கழிவறையில் மயங்கி விழுந்த பெண் பலி

திரு-பட்டினம், போலகம் மரைக்காயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி சந்தனமேரி. இவர் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறமுள்ள கழிவறைக்கு சென்ற போது சந்தனமேரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திரு-பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 6, 2025
புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.


