News August 9, 2024
ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசின் மூலம் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 14ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
ஸ்ரீவி: தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர் குமாரலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணநாராயணன். இவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார் .இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிருஷ்ணநாராயணனை கைது செய்தனர். இதில் நேஏறு கிருஷ்ணநாராயணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 14, 2025
சிவகாசி: மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

வெம்பகோட்டை பகுதியில் இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்தில் ரூ.1 கோடி கிடைக்கும் என கூறி ரூ.1.38 கோடி மோசடி செய்த ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8-வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன், ஒன்றிய மகளிரணி செயலாளர் கந்தலீலா மற்றும் ராணிநாச்சியார் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கி EPS நடவடிக்கை எடுத்துள்ளார்.
News November 14, 2025
ஊஞ்சல் உற்சவத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 6- ம் நாளான நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


