News August 8, 2024
குமரியில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோவையில் நாளை (ஆக.9) தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆட்சியர் அழகுமீனா தலைமையில், மேயர் மகேஷ் முன்னிலையில், நாளை காலை 11 மணிக்கு கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குமரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
Similar News
News March 10, 2026
குமரி: ரூ.2.10 கோடி நகை மோசடி

வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததையடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 10, 2026
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.10) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய (மார்ச்.14) சனிக்கிழமை வேலை நாள் ஆகும்.
News March 9, 2026
குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <


